திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 20 ஆயிரத்தை கடந்தது

திருப்பூர், ஏப்.8: திருப்பூர் மாவட்டத்தில் நேற்று 141 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்கள் அனைவருக்கும் தற்போது மேல் சிகிச்சைக்காக திருப்பூர் மற்றும் கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். தற்போது மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 20,001 ஆக உள்ளது. இதுபோல் நேற்று கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற 56 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரை மாவட்டத்தில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 19 ஆயிரத்து 38 ஆக உள்ளது. 735 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்நிலையில், கொரோனா தொற்றுக்கு திருப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று 85 வயது முதியவர் ஒருவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதனால் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 228 ஆக உயர்ந்துள்ளது. திருப்பூரில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருவது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: