திருச்சி, ஏப்.4: திருச்சி கிழக்கு தொகுதி அதிமுக வேட்பாளர் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் திருச்சி கடைவீதிகளில் வாக்குசேகரித்தார்.தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் பிரசாரம் நேற்று மாலை 7 மணியுடன் ஓய்ந்தது. திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளரும், அமைச்சருமான வெல்லமண்டி நடராஜன் தினந்தோறும் தொகுக்குட்பட்ட அனைத்து தரப்பு மக்களையும் சந்தித்து இரட்டை இலை சின்னத்திற்கு தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இதேபோல் அமைச்சருக்கு ஆதரவாக அதிமுக நிர்வாகிகளும், பாஜக, தமாகா, பாமக போன்ற கூட்டணி கட்சியினரும் பிரசாரம் செய்து வாக்குசேகரித்தனர்.