ஈரோடு, ஏப். 5: ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டமன்ற தொகுதிகளில் களத்தில் போட்டியிடும் 128 வேட்பாளர்களின் தேர்தல் பிரசாரம் நேற்று இரவு 7 மணியுடன் ஓய்ந்தது.
ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு கிழக்கு, மேற்கு, மொடக்குறிச்சி, பெருந்துறை, பவானி, அந்தியூர், கோபி, பவானிசாகர் (தனி) என 8 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இந்த 8 தொகுதிகளிலும் திமுக, அதிமுக, அமமுக, மநீம, பகுஜன் சமாஜ், சுயேட்சைகள் என மொத்தம் 128 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதில், 128 வேட்பாளர்களும் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட சின்னத்தை பெற்று, அந்தந்த தொகுதியில் கடந்த 3 வாரங்களாக சுட்டெரிக்கும் வெயிலிலும் அனல் பறக்கும் பிரசாரம் மேற்கொண்டிருந்தனர்.