ஊட்டி,ஏப்.3:மேலூர் ஒன்றியத்திற்குட்பட்ட காட்டேரி, கரும்பாலம், கோடேரி, கொல்லிமலை, சேமந்தாடா, கேத்தி பாலாடா போன்ற பகுதிகளில் திமுக., வேட்பாளர் ராமசந்திரன் நேற்று சூறாவளி பிரசாரம் மேற்கொண்டார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வரும் 6ம் தேதி நடக்கிறது. தேர்லுக்கு இன்னும் மூன்று நாட்களே உள்ள நிலையில் அனைத்து அரசியல் கட்சி வேட்பாளர்களும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். குன்னூர் சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் ராமசந்திரன் குன்னூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட குன்னூர் நகரம், குன்னூர் ஒன்றியம், மேலூர் ஒன்றியம், கீழ்கோத்தகிரி, கோத்தகிரி ஆகிய ஒன்றிய பகுதிகளிலும் நகர பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றார். நாள் தோறும் பொதுமக்கள் மற்றும் தேயிலை தோட்டத் தொழிலாளர்களை சந்தித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றார். நேற்று மேலூர் ஒன்றியத்திற்குட்பட்ட காட்டேரி, கரும்பாலம், கோடேரி, கொல்லிமலை, சேமந்தாடா, கேத்தி பாலாடா, செல்வீப் நகர், கோலனிமட்டம், காட்டேரிவில்லேஜ் போன்ற பகுதிகளில் திமுக., வேட்பாளர் ராமசந்திரன் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது தேயிலை தோட்ட தொழிலாளர்கள் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
தொடர்ந்து அவர் பேசியதாவது: திமுக., அரசு எப்போதும் மக்களுக்கான அரசாகவே இருந்துள்ளது.