ஆரணி, ஏப்.3: ஆரணி அருகே கணவருடன் பைக்கில் சென்ற பெண்ணிடம் செயின் பறிக்க முயன்ற வாலிபர் பிடிபட்டார். தப்பியோடிய 2 பேரை போலீசார் தேடிவருகின்றனர்.
ஆரணி அடுத்த சேவூர் ஊராட்சி இபி நகரை சேர்ந்தவர் மனோகரன், ஆம்பூர் சர்க்கரை ஆலையில் பீல்ட் ஆபீஸர். இவரது மனைவி ஜான்சிராணி(42). நேற்று, மனோகரன் தனது மனைவியுடன் இரும்பேடு பகுதியில் உள்ள அரிசி ஆலைக்கு சென்றுவிட்டு, பைபாஸ் சாலையில் பைக்கில் வந்து கொண்டிருந்தார்.ராட்டிணமங்கலம் பைபாஸ் சாலை தனியார் திருமண மண்டபம் அருகே வரும்போது, பின்தொடர்ந்து பைக்கில் வந்த 3 நபர்களில் ஒருவர் திடீரென ஜான்சிராணியின் கழுத்தில் இருந்த 4 சவரன் செயினை பறிக்க முயன்றார். சுதாரித்து கொண்ட ஜான்சிராணி மர்ம நபரின் கையை பிடித்துக்கொண்டு கூச்சலிட்டார்.