திருவெறும்பூர், ஏப்.1: திருவெறும்பூர் அருகே உள்ள பூலாங்குடி காலனியில் வாக்கு சேகரிக்க வந்த அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு அப்பகுதி பொதுமக்கள் ஆரத்தி எடுத்து மலர்தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர். திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று காலை தொகுதிக்குட்பட்ட பழங்கனாங்குடியில் வாக்கு சேகரித்தார். பின்னர் பூலாங்குடி காலனிக்கு வாக்கு சேகரிக்க வந்தபோது அப்பகுதி பெண்கள் ஆரத்தி எடுத்து, பலூன்களை பறக்க விட்டும், புறாக்களை பறக்க விட்டும், மலர்தூவியும் மேள தாளங்கள் முழங்க உற்சாகத்துடன் வரவேற்றனர். பின்னர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அந்த பகுதியில் உள்ள ஒரு டீக்கடையில் டீ குடித்தபடி வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார்.