திருவாரூர், ஏப்.1: திருவாரூர் அதிமுக வேட்பாளர் பன்னீர்செல்வம் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டு வருகிறார். அதன்படி நேற்று திருவாரூர் ஒன்றியத்தில் மாங்குடி, வடகரை, கீழமணலி உள்ளிட்ட இடங்களிலும், திருவாரூர் நகரில் அழகிரி காலனி, பனகல் சாலை உள்ளிட்ட இடங்களில் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியது: தமிழக மக்களுக்கு கடந்த 10 ஆண்டுகளாக நல்லாட்சி நடத்தி வரும் அதிமுக தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சிப் பொறுப்பை ஏற்றவுடன் அனைவருக்கும் விலையில்லா அம்மா வாஷிங்மெஷின் வழங்கப்படும். அதுபோல் ரேஷன் பொருட்கள் வீடு தேடி வந்து வழங்கும் திட்டம் தொடங்கி வைக்கப்படும்.