தார்சாலை பணியை விரைந்து முடிக்கக்கோரி மனு

திருப்பூர்,  ஏப்.1: அம்மாபாளையம் கணபதிநகர் பகுதி மக்கள்  திருமுருகன்பூண்டி பேரூராட்சி செயல் அலுவலர் ஈஸ்வரமூர்த்தியிடம் வழங்கிய  மனுவில் கூறியுள்ளதாவது: திருமுருகன்பூண்டி பேரூராட்சிக்குட்பட்ட கணபதிநகர்  பகுதியில் 80க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது. இப்பகுதியில் தார்சாலை  மற்றும் வடிகால் பணி கடந்த ஒரு வருடமாக நடைபெற்று வருகிறது. வடிகால் மீது  தரைபாலம் 2அடி உயரத்திற்கு கட்டியுள்ளதால் வாகனங்கள் செல்ல சிரமமாக உள்ளது. ஆகவே, தாங்கள் இப்பகுதியில்  ஆய்வு செய்து, வடிகால் மற்றும் தார்சாலை பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை  எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியுள்ளனர். மனுவை பெற்றுக்கொண்ட செயல்  அலுவலர் ஈஸ்வரமூர்த்தி நேரில் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக  தெரிவித்தார்.

Related Stories: