மயிலாடுதுறை, ஏப். 1: பூம்புகார் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் நிவேதா முருகன், குத்தாலம் ஒன்றியத்துக்கு உட்பட்ட கோனேரிராஜபுரம், வடமட்டம், மேக்கிரிமங்கலம், மல்லார்பேட்டை, திருவாவடுதுறை, திருவாலங்காடு மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் நேற்று வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசுகையில், கடந்த 10 ஆண்டுகளாக தமிழகத்தில் அதிமுக அரசின் அக்கறையின்மையால் விலைவாசி உயர்ந்து மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். மக்களின் அடிப்படை தேவைகள் பெறுவதற்கு கூட லஞ்சம் கொடுக்க வேண்டிய சூழ்நிலையில் மக்கள் உள்ளனர்.