சிவகாசியில் வாடிக்கையாளர்கள் பெயரில் லோன் பெற்று மோசடி

சிவகாசி, மார்ச் 31:  சிவகாசி பட்டி தெருவில் தனியார் லோன் நிறுவனம்  செயல்பட்டு வருகிறது. இங்கு வாடிக்கையாளர்களின் அரசு அடையாள அட்டை  ஆவணங்களை ஆன்லைன் மூலம் அனுப்பி வைப்பதை சரிபார்த்து அவர்களுக்கு தேவையான  பொருட்களுக்கு லோன் வழங்கி, மாத தவணை பிடித்தம் செய்து வந்தனர். இங்கு இ.பி.காலனியை சேர்ந்த முனீஸ்வரன், கார்த்திக் புரோக்கர்களாக வேலை  பார்த்தனர். இவர்கள் வாடிக்கையாளர்கள் பெயரில் லோன் ெபற்று மோசடி செய்தனர். இதுகுறித்த புகாரில் சிவகாசி டவுன் போலீசார் வழக்குப்பதிந்து  விசாரிக்கின்றனர்.

Related Stories: