உடுமலை, மார்ச் 30: உடுமலை நகரில் வார்டு வார்டாகஅமைச்சர் ராதாகிருஷ்ணன் பிரசாரம் மேற்கொண்டார். உடுமலை தொகுதி அதிமுக வேட்பாளர் அமைச்சர் ராதாகிருஷ்ணன், உடுமலை நகரில் 29, 30, 33 ஆகிய வார்டுகளில் வீடு வீடாக சென்று வாக்குசேகரித்தார். மேலும் டி.வி.பட்டணம், யூனியன் ஆபிஸ், கருணாநிதி காலனி, தளி ரோடு, பழனியாண்டவர் மில்ஸ் பின்புறம் ஆகிய பகுதிகளில் வீதி வீதியாக சென்று இரட்டை இலைக்கு வாக்கு கேட்டார்.அப்போது அவர் பேசுகையில், அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஆண்டுக்கு 6 சிலிண்டர் இலவசமாக வழங்கப்படும். இலவச வாஷிங்மெஷின் வழங்கப்படும். குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1500 வழங்கப்படும். வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும்.