பெருந்துறை, மார்ச் 30: பெருந்துறை தொகுதி அதிமுக வேட்பாளர் ஜே.கே என்கின்ற ஜெயக்குமார் தொகுதி முழுவதும் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு கேட்டு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். நேற்று காலை பெருந்துறை வேட்பாளர் ஜெயக்குமார், முன்னாள் எம்எல்ஏக்கள் பொன்னுசாமி, பொன்னுதுரை, முன்னாள் சேர்மேன் கே.கே.பழனிசாமி, பெரியசாமி ஒன்றிய செயலாளர்கள் விஜயன் (எ) ராமசாமி, ரவிச்சந்திரன் உள்பட கட்சி நிர்வாகிகளுடன் பெருந்துறை தொகுதியில் தனது பிரசாரத்தை தொடங்கினார். கிராமப்புற பகுதிகளுக்கும் திறந்த வேனில் சென்று இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். கள்ளியம்புதூர் கிராமப்பகுதியில் வாக்கு சேகரித்த அவர் அங்கு நடைபெற்று கொண்டிருந்த கோயில் விழாவில் கலந்துகொண்டு சாமி வழிபாட்டிற்கான விருத்த பாடல்களைப் பாடி கம்பத்தை சுற்றி ஆடி வந்தார். கைகோலபாளையம் பகுதியில் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்த அவர் அப்பகுதியில் காமாட்சியம்மன் கோயிலில் நடந்த விளையாட்டு போட்டியில் இளைஞர்களின் வேண்டுகோளை ஏற்று கலந்து கொண்டார். அதில் கண்ணைக் கட்டிக்கொண்டு பானை உடைக்கும் போட்டியில் கலந்து கொண்ட ஜெயக்குமார் அதில் வெற்றி