குளத்தூர்,மார்ச் 30: வைப்பார் ராஜமுனீஸ்வரர்கோயில் திருவிழாவில் பக்தர்களுக்கு கறிவிருந்து நடந்தது. வைப்பார் ராஜமுனீஸ்வரர் கோயில் பங்குனி உத்திர திருவிழா நேற்று முன்தினம் துவங்கியது. நேற்று முன்தினம் காலை சாமியாடிகள் அருகிலுள்ள சிப்பிகுளம் கடலில் புனிதநீராடி தீர்த்தகுடங்களில் தீர்த்தம் எடுத்து மேளதாளத்துடன் வைப்பார் கிராம முக்கிய வீதிகளில் ஊர்வலமாக கோயிலை வந்தடைந்தனர். தொடர்ந்து ராஜமுனீஸ்வரர் மற்றும் பரிவார தேவதைகளுக்கு அபிஷேகம் அலங்காரம் செய்து சிறப்பு பூஜைநடந்தது.