செய்யாறு, மார்ச் 29: செய்யாறு அருகே லோடு ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 23 பேர் படுகாயம் அடைந்தனர். திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்த மடிப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த 30க்கும் மேற்பட்டோர், செய்யாறு நகரில் நேற்று நடந்த உறவினர் வீட்டு காதணி விழாவில் கலந்து கொள்ள லோடு ஆட்டோவில் சென்றனர். பின்னர், நிகழ்ச்சி முடிந்ததும் ஆட்டோவில் அனைவரும் வீடு திரும்பி கொண்டிருந்தனர். செய்யாறு அருகே புளியரம்பாக்கம் கிராமம் அருகே வந்தபோது, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ சாலையின் நடுவே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், ஆட்டோவில் வந்தவர்கள் படுகாயம் அடைந்து கூச்சலிட்டனர்.