ஜெயங்கொண்டம், மார்ச் 29: ஜெயங்கொண்டம் அருகே வாணதிரயன்பட்டினம் கிராமத்தில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு பக்தர்கள் காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். ஜெயங்கொண்டம் அருகே வாணதிரயன்பட்டினம் கிராமத்தில் ஒவ்வொரு வருடமும் ஏராளமான பக்தர்கள் ஆயிரத்துக்கும் குறையாத அளவில் முருகன் கோயிலுக்கு காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம். ஜெயங்கொண்டம் அருகிலுள்ள வாணதிரயன்பட்டினம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற முருகன் கோயில் உள்ளது. இந்த முருகன் கோயிலுக்கு அருகில் உள்ள கிராமங்களான இடையார், பிலிச்சிகுழி, ஒக்கநத்தம், பருக்கல், உடையார்பாளையம், சிலகால், பொற்பதிந்த நல்லூர், நாயகனைப்பிரியாள், உள்ளிட்ட பல கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் முருகனுக்கு 1008 பேர் நேர்த்திக்கடன் செலுத்துவார்கள்.