ஊட்டி,மார்ச்29: ஊட்டி தமிழகம் ஆய்வு மாளிகையில் உள்ள கண்ணாடி மாளிகையில் கோடை சீசனை முன்னிட்டு நடவு செய்யப்பட்ட செடிகளில் வண்ண வண்ண மலர்கள் பூத்து குலுங்குகின்றன. நீலகிரி மாவட்டம் சர்வதேச சுற்றுலாத்தலங்கள் நிறைந்த மாவட்டமாக விளங்கி வருகிறது. இங்கு தோட்டக்கலைத் துறை கட்டுபாட்டில் தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, மரவியல் பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்கா, காட்டேரி பூங்கா உள்ளிட்டவைகள் உள்ளன. கோடை சீசனின் போது வர கூடிய சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் பொருட்டு இப்பூங்காக்களில் பல்வேறு வகை மலர் செடிகள் நடவு செய்யப்பட்டு பராமரிக்கப்படும்.