மதுக்கரை மத்திய ஒன்றிய பகுதிகளில் திமுக வேட்பாளர் குறிச்சி பிரபாகரன் பிரசாரம்

கோவை, மார்ச் 26: கிணத்துக்கடவு சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் குறிச்சி பிரபாகரன், மதுக்கரை மத்திய ஒன்றிய பகுதிகளில் நேற்று பிரசாரம் செய்து வாக்கு சேகரித்தார். பிரச்சாரத்தின்போது அவர் பேசியதாவது: குறிச்சி நகர்மன்ற தலைவராக இரண்டு முறை இருந்துள்ளேன். கிணத்துக்கடவு தொகுதி மக்களின் பிரச்னைகளுக்காக பதவியில் இல்லாதபோதும் தொடர்ந்து போராடியுள்ளேன். திமுக ஆட்சி அமைந்ததும் கிணத்துக்கடவு தொகுதியில் பல வளர்ச்சி திட்டங்கள் கொண்டு வரப்படும்’’ என்றார்.பிரசாரத்தின்போது கோவை கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் மருதமலை சேனாதிபதி, அவைத்தலைவர் அக்ஷயா நாகராஜ், ஒன்றிய செயலாளர் ஈ.பி.ராஜேந்திரன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் நாகராஜ சோழன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: