ஊட்டி, மார்ச் 25:நீலகிரி மாவட்டத்தில் தேர்தல் பணியாற்றும் வாக்குச்சாவடி அலுவலர்களை சுழற்சி முறையில் 3 தொகுதிகளுக்கு ஒதுக்கீடு செய்யும் பணிகள் இரண்டாம் கட்டமாக நேற்று நடந்தது. தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி நீலகிரி மாவட்டத்தில் வாக்குச்சாவடிகள், துணை வாக்குச்சாவடிகள் மற்றும் வாக்கு எண்ணும் மையத்தில் தேவையான அடிப்படை மற்றும் பாதுகாப்பு வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இத்தேர்தலில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். ஏற்கனவே, சுழற்சி முறையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஒதுக்கீடு செய்து அந்தந்த சட்டமன்ற தொகுதிகளுக்கு அனுப்பி வைத்து வாக்கு இயந்திர கிடங்கில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.