ஈரோடு, மார்ச் 25: ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டமன்ற தொகுதிகளுக்கும் வேட்பாளர்களின் எண்ணிக்கைகேற்ப 1,173 கூடுதல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் நேற்று அனுப்பி வைக்கப்பட்டது. ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டமன்ற தொகுதிகளிலும் 926 இடங்களில் 2,741 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு, தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த வாக்குச்சாவடி மையங்களில் வாக்குப்பதிவின்போது பயன்படுத்த 3,454 கட்டுப்பாட்டு இயந்திரம், 4,757 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம், 3,695 வி.வி.பேட் என மொத்தம் 10,140 இயந்திரங்கள் கடந்த வாரம் 8சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில், 8 சட்டமன்ற தொகுதிகளிலும் வேட்பாளர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், அதன் எண்ணிக்கைக்கு ஏற்ப, கூடுதல் இயந்திரங்கள் பயன்படுத்த வேண்டி உள்ளது. இதன்படி, ஈரோடு கிழக்கு தொகுதியில், 320 வாக்குச்சாவடியில் கூடுதலாக 16 வி.வி.பேட் இயந்திரமும், ஈரோடு மேற்கு தொகுதியில் உள்ள 403 வாக்குச்சாவடிகளுக்கு கூடுதலாக 25 வி.வி.பேட், மொடக்குறிச்சி தொகுதியில் உள்ள 332 வாக்குச்சாவடிக்கு கூடுதலாக 16 வி.வி.பேட், பெருந்துறை தொகுதியில் உள்ள 325வாக்குச்சாவடிக்கு கூடுதலாக 390 கட்டுப்பாட்டு இயந்திரங்களும், 17 வி.வி.பேட் இயந்திரமும், பவானி தொகுதியில் உள்ள 335 வாக்குச்சவாடிக்கு 17 வி.வி.பேட்,