தேன்கனிக்கோட்டை அருகே வரதராய சுவாமி கோயில் தேரோட்டம் தேன்கனிக்கோட்டை,

மார்ச் 24: தேன்கனிக்கோட்டை அருகே வரதராய சுவாமி கோயில் தேரோட்டம் நடந்தது. தேன்கனிக்கோட்டை அருகே அன்னியாளம் கிராமத்தில் வரதராய சுவாமி கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் தேர் திருவிழா நடப்பது வழக்கம். கடந்த 56 ஆண்டாக தேர் திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த ஆண்டிற்கான  57ம் ஆண்டும் தேர் திருவிழா நடைபெற்றது. விழாவில் சுவாமி மற்றும் ஸ்ரீதேவி, பூதேவி உற்சவ மூர்த்திகளை அலங்கரிக்கப்பட்ட தேர் மீது வைத்து பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என வணங்கி தேரை வடம் பிடித்து இழுத்தனர். மாலை, கோயிலை சுற்றி வந்து நிலை நிறுத்தினர். விழாவில் அன்னியாளம், கக்கதாசம், தேவீர உலிமங்கலம் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் அன்னதானம், நீர்மேர் வழங்கப்பட்டது. தேன்கனிக்கோட்டை போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

Related Stories: