சூளகிரி அருகே டூவீலர்கள் மோதி தொழிலாளி பலி

கிருஷ்ணகிரி, மார்ச் 24: சூளகிரி அலேசிபம் அடுத்த கொடவரலப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் ராமசாமி(60). கூலி தொழிலாளியான இவர், நேற்று முன்தினம், தனது டூவீலரில் ராயக்கோட்டை- ஓசூர் சாலையில் சென்று கொண்டிருந்தார். கண்ணசந்திரம் கூட்ரோடு பக்கம் வந்தபோது எதிரே வந்த டூவீலர் மோதியது. இதில், படுகாயமடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, சிகிச்சை பலனின்றி ராமசாமி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து, உத்தனப்பள்ளி போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: