வந்தவாசி, மார்ச் 24: வந்தவாசியில் உரிய ஆவணம் இன்றி கொண்டு சென்ற ₹1.48 லட்சம் ரொக்கத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். வந்தவாசி தேர்தல் பறக்கும் படை தாசில்தார் ஹரிகுமார் தலைமையில், சப்- இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி மற்றும் பறக்கும் படையினர், நேற்று ஆரணி நெடுஞ்சாலை மும்முனி புறவழிச்சாலை அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது, செய்யாறில் இருந்து திண்டிவனம் நோக்கி சென்ற, லோடு ஆட்டோவை மடக்கி சோதனை செய்தனர். அதில், கடலூர் மாவட்டத்தை சேர்ந்த ஷாஜகான் என்பவர் ₹91 ஆயிரம் ரொக்கம் உரிய ஆவணம் இன்றி எடுத்து சென்றது தெரியவந்தது. அந்த பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.