நஞ்சநாடு ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் தி.மு.க.வில் இணைந்தார்

ஊட்டி, மார்ச் 23: நஞ்சநாடு ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் சந்திரன் அ.தி.மு.க.வில் இருந்து விலகி தி.மு.க.வில் இணைந்தார். நஞ்சநாடு ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தி.மு.க.வில் இணையும் நிகழ்ச்சி ஊட்டியில் உள்ள கலைஞர் அறிவாலயத்தில் நடந்தது. மாவட்ட செயலாளர் முபாரக் தலைமை வகித்தார். மாவட்ட அவை தலைவர் பில்லன், மாவட்ட துணை செயலாளர் ரவிகுமார், மாவட்ட பொருளாளர் நாசர் அலி, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் முஸ்தபா, இளங்கோ ஊட்டி நகர செயலாளர் ஜார்ஜ், ஊட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் பரமசிவன், ஊட்டி வடக்கு ஒன்றிய செயலாளர் தொரை, பொதுக்குழு உறுப்பினர்கள் காமராஜ், மோகன்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக, நிர்வாகிகளுக்கு சால்வை அணிவித்து வாழ்த்து பெற்றார். தொடர்ந்து, மாவட்ட செயலாளர் முபாரக் உறுப்பினர் அட்டையை வழங்கினார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள் சசிகுமார், காந்தல் ரவி, எல்கில் ரவி, கர்ணன், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் நாகராஜ், ஜெயராமன், தொட்டண்ணி செல்வம், ஊட்டி வடக்கு ஒன்றிய துணை செயலாளர் பசவன், கெந்தொரை மகேஷ், ஊராட்சி செயலாளர்கள் குண்டன், பெள்ளன், செல்வன், விஸ்வநாதன், ராமன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: