வேட்டவலம் அருகே விவசாயிடம் 99 ஆயிரம் பறிமுதல்

வேட்டவலம், மார்ச் 23: வேட்டவலம் அடுத்த சொரத்தூர் அருகே நேற்று காலை தேர்தல் நிலை கண்காணிப்பு குழு தலைவர் பிரகாஷ் தலைமையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த லோடு ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்தனர்.

அதில் விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் வட்டம், வீரப்பாண்டி கிராமத்தை சேர்ந்த விவசாயி ஏழுமலை என்பவர் வேட்டவலத்திற்கு வீடு கட்ட தேவையான சிமென்ட் மற்றும் கம்பிகள் வாங்க உரிய ஆவணம் இன்றி கொண்டு வந்த ₹99 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். பின்னர் அந்த பணத்தை கீழ்பென்னாத்தூர் சட்டமன்ற தொகுதி தேர்தல் அலுவலர் கண்ணப்பனிடம் ஒப்படைத்தனர்.

Related Stories: