தண்டராம்பட்டு அருகே பதற்றமான வாக்குச்சாவடிகளில் அதிகாரி ஆய்வு

தண்டராம்பட்டு, மார்ச் 22: தண்டராம்பட்டு அருகே பதற்றமான வாக்குச்சாவடி மையங்களில் தேர்தல் பார்வையாளர் அஜய்குமார் ஆய்வு செய்தார். தண்டராம்பட்டு அடுத்த சேர்ப்பாப்பட்டு, கீழ்சிறுப்பாக்கம் ஆகிய கிராமங்களில் உள்ள வாக்குச்சாவடி மையங்கள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று தேர்தல் பார்வையாளர் அஜய்குமார் சவுத்ரி வாக்குச்சாவடி மையங்களை பார்வையிட்டு பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்தார். அப்போது. வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மகாதேவன், அருணாச்சலம், அமிர்தராஜ், இன்ஸ்பெக்டர் தனலட்சுமி, வருவாய் ஆய்வாளர் சின்னப்பா ராஜ், கிராம நிர்வாக அலுவலர் பொற்செல்வன் மற்றும் பலர் உடனிருந்தனர்.

Related Stories: