வேட்டவலம் அருகே மாடு வியாபாரிடம் ₹66 ஆயிரம் பறிமுதல்

வேட்டவலம், மார்ச் 22: வேட்டவலம் அருகே மாடு வியாபாரியிடம் ₹66 ஆயிரம் ரொக்கத்தை தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினர் பறிமுதல் செய்தனர். வேட்டவலம் அடுத்த சாணிப்பூண்டி கிராமம் முருகன் கோயில் அருகே நேற்று காலை தேர்தல் நிலை கண்காணிப்பு குழு தலைவர் கலைச்செல்வி தலைமையில் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் முருகன்மற்றும் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக வந்த லோடு ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் செஞ்சி வட்டம், மேல்சித்தாமூர் கிராமத்தை சேர்ந்த மாடு வியாபாரி திருமலை என்பவர் தளவாய்குளம் சந்தையில் மாடு வாங்க உரிய ஆவணம் இன்றி கொண்டு வந்த ₹66,500 ஐ பறிமுதல் செய்தனர். பின்னர், அந்த பணத்தை கீழ்பென்னாத்தூர் சட்டமன்ற தொகுதி தேர்தல் அலுவலர் கண்ணப்பனிடம் ஒப்படைத்தனர்.

Related Stories: