காங்கயம், மார்ச் 22: காங்கயம் தொகுதி தி.மு.க. வேட்பாளர் மு.பெ.சாமிநாதன் நேற்று காங்கயம் நகர பகுதியில் உதயசூரியன் சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார். காங்கயம் சட்டமன்ற தொகுதியில் தி.மு.க. சார்பில் உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினரும், முன்னாள் அமைச்சரும் திருப்பூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளருமான மு.பெ. சாமிநாதன் போட்டியிடுகிறார். இவர், நேற்று காங்கயம் நகர பகுதியில் உள்ள பாரதியார் வீதி, திருப்பூர் ரோடு, திருவள்ளுவர் வீதி, படேல் வீதி, பேருந்து நிலையம், மூர்த்திரெட்டிபாளையம் மற்றும் காங்கயம் நகர பகுதி முழுவதும் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். பல இடங்களில் அவருக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.