திருச்சி, மார்ச் 21: திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் லோகநாதன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழகத்தில் வரும் 6ம் தேதி நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் திருச்சி மாநகர போலீசாருடன் இணைந்து பணியாற்றுவதற்கு முன்னாள் ராணுவ வீரர்கள் அனைவரும் முன்வர வேண்டும். இதுவரை தமிழகத்தில் நடந்த தேர்தல்கள் அனைத்திலும் தங்களது பங்களிப்பால் சிறப்பாகவும், அமைதியான முறையிலும் நடைபெற்றன. அதேபோல் தற்போது 2021ல் நடக்கும் சட்டமன்ற தேர்தல் அமைதியாகவும், பாதுகாப்பாகவும் நடப்பதற்காக தங்களுடைய பங்களிப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.