திருச்சி, மார்ச் 21: ரங்கம் சட்டமன்றத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கு.ப.கிருஷ்ணன் நேற்று மாலை அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட உத்தமர்சீலி, பனையபுரம், கிளிக்கூடு, கவுத்தரசநல்லூர் பகுதிகளில் வாக்குகள் சேகரித்தார். அப்போது அவருக்கு ஏராளமான பெண்கள் உற்சாகத்துடன் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். அப்போது வேட்பாளர் கு.ப.கிருஷ்ணன் பேசுகையில், லால்குடி கூகூர் முதல் கிளிக்கூடு வரை காவிரி, கொள்ளிடக் கரையில் தரைப்பாலம் அமைத்து தரப்படும் என்று தெரிவித்தார். மேலும் அதிமுக வெற்றி சாதனைகள் குறித்து பேசுகையில், தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம் தமிழ்நாட்டில் மட்டும்தான் உள்ளது. திருச்சி கிளிக்கூடு முதல் தஞ்சை மாவட்டம் வரை அதிமுக ஆட்சியில் தான் சாலைகள் அமைக்கப்பட்டது என்றார்.