கரூர் பசுபதீஸ்வரர் கோயிலில் பங்குனி பெருந்திருவிழா கொடியேற்றம் திரளான பக்தர்கள் தரிசனம்

கரூர், மார்ச்21: கரூர் பசுபதீஸ்வரர் கோயிலில் பங்குனி பெருந்திருவிழாவினை முன்னிட்டு கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. கரூர் பசுபதீஸ்வரர் கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி பெருவிழா சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. இந்தாண்டுக்கான பங்குனி விழாவினை முன்னிட்டு நேற்று காலை 10.30மணிக்கு மேல் துவஜாரோஹணம் எனப்படும் கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்வுகளான திருக்கல்யாணம் 26ம்தேதியும், திருத்தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி மார்ச் 28ம்தேதியும் நடைபெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

Related Stories: