சென்னை: வேளச்சேரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடும் ஹசன் மவுலானா நேற்று வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அதை தொடர்ந்து முக்கிய தலைவர்களை சந்தித்து ஆசி பெற்றார். வேளச்சேரி தெகுதியில் திமுக கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளராக ஹசன் மவுலானா போட்டியிடுகிறார். இவர் தனது தொகுதிக்குட்பட்ட மண்டல அலுவலகத்தில் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார். அவருடன், காங்கிரஸ் மாவட்ட தலைவர் அடையாறு துரை, திமுக பகுதி செயலாளர்கள் சேகர், துரை கபிலன் உள்ளிட்ட பலர் உடன் சென்றனர். தொடர்ந்து அவர் தனது தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவருக்கு பொதுமக்கள் மலர் தூவியும், ஆரத்தி எடுத்தும் உற்சாக வரவேற்பு அளித்தனர். கடந்த 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் மக்கள் படும் வேதனைகள் குறித்து அவர் பொதுமக்களிடையே விளக்கி கூறி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.