சிஜேபி போராட்டக்காரர்கள் மீது டெல்லி காவல்துறை நடவடிக்கை எடுக்காது: மாநில அரசு உத்தரவு

 

புதுடெல்லி: கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைமையில் நடந்த போராட்டத்தில் பங்கேற்ற தனிநபர்கள் மீது டெல்லி காவல்துறை எந்த பாதகமான சட்ட நடவடிக்கையையும் எடுக்காது என டெல்லி அரசு உத்தரவில் கூறப்பட்டுள்ளது. நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் போராட்டம் நடத்திய கரப்பான் பூச்சி கட்சி மாணவர்கள் மீது எந்த சட்ட மேல் நடவடிக்கையும் எடுக்கப்படாது என ஒன்றிய அரசு உத்தரவாதம் அளித்துள்ளது.

மாணவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை வாபஸ் பெறாவிட்டால் மீண்டும் டெல்லியில் போராட்டம் நடத்துவதாக சிஜேபி கட்சி எச்சரித்துள்ளது.  இந்நிலையில், டெல்லி அரசின் உள்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்ட உத்தரவில், ‘‘சிஜேபி தலைமையில் நடந்த போராட்டத்தில் பங்கேற்ற தனிநபர்கள் மீது டெல்லி காவல்துறை எந்த விதமான பாதகமான சட்ட நடவடிக்கையும் எடுக்காது. ஏற்கனவே கைது அல்லது தடுப்பு காவல் நடடிக்கைகள் மேற்கொள்ளபட்டிருந்தால் மறுஆய்வு செய்து சம்மந்தப்பட்டவர்களை விடுவிப்பதற்கான நடவடிக்கை விரைவாக மேற்கொள்ளப்படும்.

ஆனால் குற்றப்பின்னணி கொண்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’’ என கூறப்பட்டுள்ளது.
மாணவர்கள் பேரணியில் பங்கேற்றவர்களில் குற்றப் பின்னணி கொண்ட 2,800க்கும் மேற்பட்ட நபர்களையும் காவல்துறை அடையாளம் கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Related Stories: