மேகதாது விவகாரத்தில் ஒன்றிய அரசின் நீர்வளத்துறை தவறான நிலைப்பாட்டை திருத்திக்கொள்ள வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

சென்னை: மேகதாது விவகாரத்தில் ஒன்றிய அரசின் நீர்வளத்துறை தங்களின் தவறான நிலைப்பாட்டை திருத்திக்கொள்ள வேண்டும் என ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: மேகதாதுவில் அணைக் கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசின் முயற்சிக்கு தமிழக அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். மேகதாது அணை பிரச்னையில் தமிழக அரசியல் கட்சிகள் ஒத்தக்கருத்தோடு ஒரே நிலையில் குரல் கொடுக்க வேண்டும்.

தமிழக விவசாயிகளின் வாழ்வாதார பிரச்னையில் மத்திய அரசினுடைய இத்துறை சம்பந்தப்பட்ட துணை அமைச்சர் நாடாளுமன்றத்தில் காவிரி நீர் குறித்து பதில் அளிக்கையில் பொறுப்பற்ற முறையில் கூறியிருப்பது, பொறுப்புள்ள அமைச்சருடைய நியாயமான நடுநிலையான செயலாக இல்லை. மேகதாது விவகாரத்தில் ஒன்றிய அரசின் நீர்வளத்துறை தங்களுடைய தவறான நிலைப்பாட்டை திருத்திக்கொள்ள வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் வலியுறுத்துகிறது. இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Related Stories: