சீமான் மீது அவதூறு: யூடியூப்பர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய ஐகோர்ட் கிளை ஆணை!

மதுரை: சீமான் பற்றி அவதூறாகப் பேசிய யூடியூப்பர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நாளை அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றக் கிளை ஆணையிட்டுள்ளது. காவல்துறை ஒருதலைப்பட்சமாகச் செயல்படுவதாகக் கண்டனம் தெரிவித்த நீதிபதி விக்டோரியா கவுரி, முதலமைச்சர் பற்றிப் பேசினார் என்பதற்காக திமுக எம்.எல்.ஏ.வை உடனே கைது செய்த போலீஸ், சீமான் விவகாரத்தில் ஏன் வழக்குப்பதிவு செய்யவில்லை? என்று கேள்வி எழுப்பினார். மேலும், சீமான் பற்றி அவதூறாகப் பேசிய யூடியூப்பர்கள் பிஸ்மி, தமிழன் கோகுல் மீது நடவடிக்கை கோரி நாம் தமிழர் கட்சித் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவின் அடிப்படையில், அந்த அவதூறு வீடியோக்களை நீக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related Stories: