நெல்லை: ‘முழுநேரமாக குதிரை பேர வேலையைத்தான் தவெக அரசு செய்து வருகிறது. பழிவாங்கும் செயலில்தான் தவெக அரசு ஈடுபட்டு வருகிறது. தவெக அரசு மீது அவர்களது கட்சி நிர்வாகிகளே புகார் கூறுகின்றனர்’ என பாளையங்கோட்டை சிறையில் திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயனை சந்தித்த பின் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேட்டியளித்தார்.
