செங்கம், மார்ச் 16: செங்கம் தாலுகாவில் 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் 8 வழிச்சாலை எதிர்ப்பு விவசாயிகள் திமுகவுக்கு வாக்கு சேகரிக்க உறுதிமொழி ஏற்றனர். திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த பெரும்பட்டம் கிராமத்தில் நேற்று 8 வழிச்சாலை எதிர்ப்பு இயக்க விவசாயிகளின் ஆலோசனை கூட்டம் நடந்தது. அப்போது வரும் சட்டமன்ற தேர்தலில் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், 8 வழிச்சாலை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மத்திய, மாநில அரசுகளை கண்டித்து தேர்தலில் தக்க பாடம் புகட்டவும், திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு வாக்களித்து வெற்றி பெற செய்யவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.