கறிவேப்பிலை வியாபாரியிடம் ₹67 ஆயிரம் பறிமுதல் கலசபாக்கம் அருகே பறக்கும்படை அதிரடி

கலசபாக்கம், மார்ச் 15: கலசபாக்கம் அருகே கறிவேப்பிலை வியாபாரி உரிய ஆவணம் இன்றி கொண்டு சென்ற ₹67 ஆயிரத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். கலசபாக்கம் அடுத்த தென்பள்ளிப்பட்டு பகுதியில் நேற்று தேர்தல் பறக்கும்படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, வேலூரில் இருந்து திருவண்ணாமலை நோக்கி வந்த மினி வேனை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், வேன் டிரைவரின் சட்டை பையில் ₹67,200 இருப்பது தெரியவந்தது. ஆனால் உரிய ஆவணங்கள் இல்லாததால் அந்த பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். பின்னர், அந்த பணத்தை தேர்தல் நடத்தும் அலுவலர் பார்த்திபனிடம் ஒப்படைத்தனர். அப்போது தாசில்தார் அமுல் உடனிருந்தார்.

Related Stories: