திமுக கூட்டணிக்கு முஸ்லிம் அமைப்பு ஆதரவு

திருச்சி, மார்ச் 15: திமுக தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவு அளிப்பது ஏகத்துவ முஸ்லிம் ஜமாத் அமைப்பு தீர்மானம் நிறைவேற்றியது. ஏகத்துவ முஸ்லிம் ஜமாத் அமைப்பு தலைமை நிர்வாக குழு கூட்டம் திருச்சியில் நேற்று நடந்தது.  மாநில தலைவர் அல்டாபி தலைமை வகித்தார். வேளாண் சட்டம், குடியுரிமை திருத்த சட்டம், பண மதிப்பிழப்பு நடவடிக்கை, பெட்ரோல், டீசல், காஸ் விலை உயர்வு, நீட் தேர்வு, விலைவாசி உயர்வு ஆகியவற்றை கண்டிப்பது. அடிமை சேவகம் செய்யும் அதிமுக அரசு, இவற்றையெல்லாம் பாஜகவுடன் இணைந்து ஆதரிக்கிறது. மக்கள் மத்தியில் மத ரீதியாக பிளவை ஏற்படுத்தி இந்தியாவின் ஒருமைப்பாட்டை சீர்குலைக்கும் பாஜ, அதிமுக கூட்டணி வீழ்த்தப்பட வேண்டும்.  எனவே வரும் சட்டமன்ற தேர்தலில் ஜனநாயகத்தையும், இறையாண்மையையும் பாதுகாக்க போராடி வரும் திமுக தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவு அளிப்பது என இந்த கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

Related Stories: