சென்னை: எஸ்டிபிஐ கட்சியின் தேசிய துணைத் தலைவர் முகமது ஷபி வெளியிட்ட அறிக்கை:
நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிரான போராட்டத்திற்கு ஆதரவாக, டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த 21 நாட்களாக தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் மற்றும் போராட்டக்காரர்களை ஒன்றிய மோடி அரசு வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தியிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இதன் மூலம் மக்களின் அமைதியான போராட்ட உரிமையை அரசு நசுக்கியுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்துவதா? மோடி அரசுக்கு எஸ்டிபிஐ கட்சி கண்டனம்
- ஜந்தர் மந்தர்
- SDBI
- மோடி அரசு
- சென்னை
- தேசிய துணைக் குடியரசுத் தலைவர்
- முகமது ஷஃபி
- NEET
- சோனம்
- தில்லி
- ஜந்தர் மந்தர்
