சென்னை: அதிமுக ஐடி விங் நிர்வாகி இந்திராணி சுடலைமுத்து கைது செய்யப்பட்டதற்கு நடிகை காயத்ரி ரகுராம் கண்டனம் தெரிவித்துள்ளார். தவெக அரசை விமர்சித்ததற்காக இந்திராணி சுடலைமுத்து கைது செய்யப்பட்டதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஒரு அரசாங்கம் விமர்சனங்களை எதிர்கொள்ள தயங்கினால் அது அரசுப் பதவியில் இருக்கக்கூடாது. தவெக அரசின் மாற்றம் என்பதன் அர்த்தம் இதுதானா என்று நடிகை காயத்ரி ரகுராம் கேள்வி எழுப்பியுள்ளார்.
