கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை-அஞ்செட்டிக்கு இடையே உள்ள பெட்டமுகிலாளம் பகுதியில் நேற்றிரவு 7.52 மணிக்கு நில அதிர்வு ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 3.0 ஆக பதிவாகியுள்ளது. இந்த நில அதிர்வு, பூமிக்கு அடியில் சுமார் 10 கி.மீ.ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
