சென்னை: வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த வசந்தகுமார்(21) என்பவர் வால்டாக்ஸ் சாலையில் கத்தியால் குத்திக் கொலை செய்யபட்டார். சேப்பாக்கத்தில் தனது காதலி திவ்யாவை பார்த்துவிட்டு நள்ளிரவில் வீடு திரும்பிய போது எதிரே வந்த வாகனத்தில் மோதி தகராறு ஏற்பட்டுள்ளது. வாகனத்தில் மோதி ஏற்பட்ட தகராறில் வசந்தகுமாரை கத்தியால் குத்திவிட்டு இளைஞர்கள் 2 பேர் தப்பி ஓடியுள்ளனர்.
