தா.பழூர், மார்ச் 12: அரியலூர் மாவட்டம், தா.பழூர் ஒன்றியம் விக்கிரமங்கலம் அருகே ஆலவாய் கிராமம் கீழத் தெருவை சேர்ந்தவர் கோவிந்தராஜ்(63), கூலித்தொழிலாளி.
இவரும் கீழநத்தம் கிராமத்தை சேர்ந்த மரியதாஸ் என்பவரும் பெண் பார்க்கும் விஷயமாக சுத்தமல்லி வரை சென்றுவிட்டு. அங்கிருந்து திரும்பி விக்கிரமங்கலம் சாலையில் டூவீலரில் வந்துகொண்டிருந்தனர். அப்போது ஆலவாய்க்கும் கோரைக்குழிக்கும் இடையே துணிச்சிக்குட்டை என்ற ஏரிக்கு அருகில் வந்தபோது எதிர்பாராதவிதமாக மரியதாஸ் ஓட்டி வந்த டூவீலர் மீது எதிரே வந்த லோடு ஆட்டோ மோதியது. அப்போது டூவீலர் பின்னால் அமர்ந்து வந்த கோவிந்தராஜ் நிலை தடுமாறி கீழே விழுந்தார். சரக்கு ஆட்டோவின் முன் சக்கரம் கோவிந்தராஜின் தலையின் மீது ஏறி இறங்கியது.