அண்ணா நகர் பகுதியில் சாக்கடை வடிகால் அமைக்கும் பணி

 

கரூர், ஜூன் 25: கரூர் மாநகராட்சிக்குட்பட்ட அண்ணா நகர் பகுதியில் நடைபெற்று வரும் சாக்கடை வடிகால் அமைக்கும் பணியை விரைந்து முடித்திட வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கரு்ர் மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் சாக்கடை வடிகால்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதே போன்ற பணிகள் சின்னாண்டாங்கோயில் அண்ணா நகர் பகுதியிலும் நடைபெற்று வருகிறது.

இந்த பணி தாமதாக நடைபெற்று வருவதால் பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் அனைத்து தரப்பினர்களும் மாற்று பாதையில் சென்று வருகினற்னர். மேலும்இ இந்த பகுதியில் அதிகளவு வாகன போக்குவரத்தும் நடைபெற்று வருகிறது. எனவேஇ சம்பந்த்பட்ட அதிகாரிகள் இந்த பகுதியில் நடைபெற்று வரும் சாக்கடை வடிகால் அமைக்கும் பணியை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.

Related Stories: