பண்டிதகாரன்புதூர் ஆராய்ச்சி மையத்தில் கறவை மாடு வளர்ப்பு பயிற்சி

 

வேலாயுதம்பாளையம். ஜூன் 18: கறவைமாடு வளர்ப்பு பயிற்சி வரும் 23ம் தேதி நடக்கிறது. கரூர் மாவட்டம், மண்மங்கலம் அருகிலுள்ள பண்டுதகாரன்புதூர் கால்நடை மருத்துவ பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மைய வளாகத்தில், லாபகரமான கறவை மாடு வளர்ப்புகுறித்த ஒருநாள் உள்வளாக கட்டணப் பயிற்சி வரும் 23ம் தேதி நடைபெற உள்ளது. விவசாயிகள், கால்நடை பண்ணையாளர்கள் மற்றும் கறவை மாடு வளர்ப்பில் ஆர்வமுடையவர்கள் கலந்து கொள்ளலாம். கறவை மாடு வளர்ப்பு தொடர்பான விவசாயிகள், மற்றும் கறவை மாடுகள் வளர்ப்போருக்கு சந்தேகங்களுக்கு நிபுணர்களிடமிருந்து தெளிவான விளக்கங்களைப்பெற்று பயன்பெறலாம்.

Related Stories: