நெல்லை, மார்ச் 10: அதிமுக கூட்டணியில் இருந்து விலகியதாக விஜயகாந்த் அறிவித்ததை வரவேற்று நெல்லையில் தேமுதிகவினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர். சட்டமன்ற தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தையில் அதிமுக - தேமுதிக இடையே தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடித்து வந்தது. இந்நிலையில் நேற்று தேமுதிக தலைமை அலுவலகத்தில் கட்சியினர் நிறுவனர் விஜயகாந்த் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி, அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக வெளியேறுவதாக விஜயகாந்த் அறிவித்தார்.