சென்னை: கிளாம்பாக்கத்தில் 300 அரசு பேருந்துகளை இயக்காமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதற்கு நயினார் கண்டனம் தெரிவித்துள்ளார். மக்கள் பணத்தை தொட மாட்டோம் என கூறிய முதல்வர் விஜய், பஞ்ச் வசனங்களை விடுத்து செயலில் காட்ட வேண்டும். உடனடியாக புதிய பேருந்துகளை அந்தந்த பணிமனைகளுக்கு அனுப்பி இயக்க உத்தரவிட வேண்டும் என்று நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
