செய்துங்கநல்லூரில் அனைத்து வசதிகளுடன் துணை ஆரம்ப சுகாதார நிலையம் மேம்படுத்தப்படுமா? செய்துங்கநல்லூர்,

 

ஜூன் 19:செய்துங்கநல்லூரில் செயல்பட்டு வரும் துணை ஆரம்ப சுகாதார நிலையத்தை மேம்படுத்தி, அனைத்து வசதிகளுடன் கூடிய ஆரம்ப சுகாதார நிலையமாக தரம் உயர்த்த வேண்டும் என பொதுமக்கள், நோயாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கருங்குளம் வட்டாரத்தில் வளர்ந்து வரும் முக்கிய கிராமமான செய்துங்கநல்லூர், நெல்லை-திருச்செந்தூர் பிரதான சாலையில் அமைந்துள்ளது. இப்பகுதியைச் சுற்றியுள்ள கரையடிப்புதூர், மேல தூதுகுழி, கீழ தூதுகுழி, சந்தையடியூர் உள்ளிட்ட பல குக்கிராம மக்களுக்கு சுகாதார சேவை அளிக்கும் மையமாக துணை ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது.இந்த நிலையம் காலை முதல் மதியம் 12 மணி வரை மட்டுமே இயங்குவதுடன், ஒரு செவிலியர் மட்டுமே பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது. 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கும் இப்பகுதியில் முழுமையான அரசு மருத்துவமனை இல்லாததால், மதியத்திற்கு பிறகு சிகிச்சை தேவைப்படும் நோயாளிகள் கருங்குளம் அல்லது திருநெல்வேலிக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது

Related Stories: