சென்னை: தங்க முலாம் பூசப்பட்ட தகரம் ஆளுநர் உரை என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விமர்சனம் செய்துள்ளார். கடந்த கால ஆளுநர் உரையில் உள்ளதையே கட் காப்பி பேஸ்ட் செய்துள்ளது தவெக அரசு. தமிழக விவசாயிகளுக்கு எதிராக செயல்படும் கேரளம், கர்நாடக காங். அரசுகளுக்கு தவெக விசுவாசமாக உள்ளது. தவெக ஆட்சியின் 4வது காலை பிடித்துக் கொண்டிருக்கும் காங். கட்சி மீதான விசுவாசம் வெளிப்பட்டுள்ளது. பெண்கள் பாதுகாப்பு அரசின் லட்சியம் என ஆளுநர் உரையில் கூறியிருப்பது கேலிக்கூத்தாக உள்ளது என்றும் ;கூறியுள்ளார்.
