கிருஷ்ணகிரியில் திடீர் மழை

கிருஷ்ணகிரி, மார்ச் 8: கிருஷ்ணகிரியில் கோடைக்கு முன்பே வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதனால் பகல் நேரத்தில் பொதுமக்கள் வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர். கடந்த இரண்டு நாட்களுக்கு முன் 10 நிமிடம் மட்டுமே பெய்த மழையால், மக்கள் ஏமாற்றமடைந்தனர். இந்நிலையில், நேற்று அதிகாலை 3 மணியளவில் கிருஷ்ணகிரி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் மழை பெய்ய துவங்கியது. ஒரு மணி  நேரத்திற்கும் மேலாக பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது. இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். இதேபோல் சூளகிரியில் நேற்று அதிகாலை ஒரு மணி நேரத்திற்கு மேல் சாரல் மழை பெய்ததால், குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவியது.

Related Stories: